


சாலையில் திடீரென விழுந்த மரம் விரைந்து வந்து அகற்றிய தீயணைப்பு துறையினர். மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஒன்றாவது சாலையில் இன்று மதியம் பெரிய மரம் ஒன்று திடீரென்று பல கிளைகளுடன் உறிந்து கீழே விழுந்தது நல்வாய்ப்பாக யாரும் இந்தப் பகுதியில் நடந்து செல்ல வில்லை அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் அவர்கள் தலைமையிலான குழுவினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது எனினும் துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் கீழே விழுந்த மரத்தை உடனடியாக அகற்றினார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்