




சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் – தமிழக அரசு !
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது – தமிழக அரசு.
சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை – தமிழக அரசு.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும் – தமிழக அரசு.
வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் 4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு.
சென்னையில் நாளை முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் – வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவிப்பு.