
முழு ஊரடங்கில் பொருட்களை வாங்க மக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது – சென்னை காவல் ஆணையர் விளக்கம்
சென்னை மாநகருக்குள் 288 சோதனை சாவடிகள் அமைப்பு – சென்னை காவல் ஆணையர்
தேவையின்றி வெளியில் வருவோரை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் – சென்னை காவல் ஆணையர்
நாளை முதல் சென்னையில் அண்ணா சாலை மூடப்படும். அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே சோதனைக்கு பின் அனுமதிக்கப்படும்: ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி.
அண்ணா சாலை உட்பட சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும்
உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்
திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது
முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்
காவல் ஆணையர் திரு. விஸ்வநாதன்