
உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உடுமலை சங்கர் கொலை – கவுசல்யா தந்தை விடுவிப்பு
உடுமலை சங்கர் கொலை வழக்கில், 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு
கவுசல்யாவின் தந்தை விடுதலை – 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் விடுதலையை உறுதிசெய்து தீர்ப்பு
கவுசல்யாவின் தந்தைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்தது உயர்நீதிமன்றம்
வழக்கில் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை ரத்து
இதேபோல, பட்டிவீரன்பட்டி மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரத்து
திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை
தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் பட்டிவீரன்பட்டி மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது