வட சென்னை காவல்துறை துணை ஆணையர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வீதிகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர்.
இதனால் வடசென்னை காவல்துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி அவர்கள் இராயபுரம் போஜராஜன் நகரில் வீடு வீடாகச் சென்று முககவசம் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அருகில் உதவி ஆணையர்கள் , ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் , காவலர்கள் என பலர் உடனிருந்தனர்.