விழுப்புரம் சரக டிஐஜியாகப் பதவி வகித்த சந்தோஷ்குமார் ஐஜி (நிர்வாகம்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னை இணை ஆணையராக (போக்குவரத்து) பதவி வகித்த கே.எழிலரசன் பணி மாறுதலில் விழுப்புரம் சரக டிஐஜியாக இன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது சொந்த ஊர் புதுச்சேரி. பிஎஸ்சி தோட்டக்கலை படித்து 2004-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தேன். விழுப்புரம் சரகமான கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைக் குற்றமற்ற சரகமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.