
வறுமையால் வாடும் 105 வயது மூதாட்டிக்கு உதவிய அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 105) இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூதாட்டியின் வாரிசுகள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். காசியம்மாளுக்கு மொத்தம் 50 பேரப்பிள்ளைகள் உள்ளநிலையில் யாரும் இவரை கவனிப்பதில்லை.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது மிகவும் வறுமையில் வாடியுள்ளார் யாரும் அவருக்கு உணவளிக்க முன்வரவில்லை. இதனையறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் இன்று நேரில் சென்று வறுமையில் வாடிவந்த மூதாட்டிக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கி உதவினார்.