
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளி இடங்களில் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, சமூக இடைவெளியை கண்டிப்பாக அனைவரையும் கடைபிடிக்க வைப்பது
மற்றும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு முக கவசம் வழங்குவது என அனைத்து காவல் அதிகாரிகளும் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

