
காவல்துறையினர் பொது மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் காவல்துறையை களங்கப்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என ரோந்து பணிக்கு ஒலிபெருக்கி வழங்கிய புதுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் செயல் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உயரதிகாரிகள் காவல்துறையினர் பொதுமக்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்து காவலர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் கோபாலச்சந்திரன் ரோந்து பணிக்கு 10 ஒலிபெருக்கிகளை காவலர்களுக்கு வழங்கி ஊரடங்கு உத்தரவால் எட்டு மணிக்கு அனைத்து கடைகளையும் அடைக்க வலியுறுத்த வேண்டும் மேலும் கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பொதுமக்களை காவல்துறையினர் மரியாதையுடன் அன்பாக நடத்த வேண்டும் காவல்துறையினரின் பெயரை கலங்கப்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது காவல்துறையினர் மக்களின் நண்பன் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்று கூறி எடுத்துரைத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில் நகர காவல் ஆய்வாளர் பரவாசுதேவன் நகர காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்



