
21.07.2020. மதுரை மாவட்டம். செக்கானூரணி, பெருமாள் கோவில்பட்டி அருகே மதுரை மாவட்ட SP தனிப்பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்குப் புறம்பாக மணல் திருடி கொண்டிருந்த, அலெக்ஸ் பாண்டியன் உட்பட 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், 5 லாரிகள், 3 இரு சக்கர வாகனங்கள் பணம் 55-ஆயிரத்தை பறிமுதல் செய்து செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி நபர்கள் மீது செக்கானூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்…..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்