
அரியலூர் மாவட்டம், உடையார்
பாளையம் பயறனீஸ்வரர் ஆலய பெரிய ஏரியில் நேற்று விக்னேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். துரதிஸ்டவசமாக விக்னேஷ் ஏரியில் தவறி போய் ஆழமான பகுதி சென்று மூழ்கி உயிர் இழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அரியலூர், செந்துறைமற்றும்ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்புக் குழுவினர் இனைந்து இறந்த விக்னேஷின் உடலை இரவு முழுவதும் தேடி மீட்டெடுத்து அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். . துரிதமாக செயல்பட்ட உடலினை மீட்டெடுத்த தீயணைப்பு மீட்புப் படையினரின் பணியினைப் பாராட்டி அரியலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தீயணைப்பு மீட்பு குழுவினர்
நிலையஅலுவலர்கள்புகழேந்தி(அரியலூர்),உதயகுமார்(செந்துறை),மோகன்ராஜ்(ஜெயங்கொண்டம்) மற்றும் நிலையங்களில் பணிபுரியும் மீட்புபணியாளர்
களையும் பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை
வழங்கினர்.


