
ஜுலை 20ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கியின் ‘அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிவோருக்கு அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நினைவுப்பரிசு வழங்கி வருகின்றனர்.
அதன்பேரில், இந்தாண்டு பரோடா வங்கியின் அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு, பரோடா வங்கியின் சென்னை நகர மண்டலம்-1, துணை பொது மேலாளர் திரு.கே.வி.சலபதி நாயுடு, துணை மண்டல அதிகாரி திரு.BH NS.ராதாகிருஷ்ணன் மற்றும் முதுநிலை மேலாளர் திருமதி ருசி பிந்த்ரா ஆகியோர் நேற்று (21.7.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக பணிபுரியும் ‘சென்னை பெருநகர காவல் துறை’யினரை பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.