
புதுக்கோட்டை
கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு
சென்றவர்களின் குடும்பத்தினர் மற்றும் குணமடைந்து திரும்பிய
நோயாளிகளிடம் மற்றவர்கள் பயத்தின் காரணமாக வெறுப்புணர்வுடன்
நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தகவல்கள்
வரப்பெறுகின்றன.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்கள்
பாதுகாப்புடன் விலகி இருந்து தேவையான உதவிகளை செய்திடலாம்.
கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன்
இருப்பது அவசியமானதாகும். அதேநேரம் நோய் தொற்றுக்கு ஆளானவர்
மற்றும் அவர்தம் குடும்பத்தினரிடம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தாமல்
மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஆட்சியர் உமாமகேஸ்வரி வேண்டுகோள்.