
ரயிலில் இன்ஜின் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி ….. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் அருகே இன்று காலை 11.30 மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடப்பதாக மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து மதுரை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் முதற்கட்ட விசாரணையில் யார் என்று கேட்டார்கள் எனினும்.. இறந்தவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை ,,,இவர் .வெள்ளை நிற சாரதி சட்டையும் வேட்டியும் அணிந்து இருந்தார் ,ரயில் இன்ஜின். வருவதை கவனிக்காமல் ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரியவருகிறது இவரைப்பற்றிய அவர்கள் யாருக்கும் தெரிய வந்தால், மதுரை ரயில்வே காவல் நிலையத்திற்கு,, தகவல் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர் அல்லது சோழவந்தான் காவல் நிலையத்திலும் தகவல் கொடுக்கலாம் எனவும் மதுரை ரயில்வே காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள் செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்
