
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவின் போது போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தியடைந்த இளைஞர் முகிலன் தீக்குளித்து 8 நாளுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி லிலாவுக்கு விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் வழங்கினர்.இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன்,ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் நகர செயலாளர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.