
தீயணைப்பு வீரர் ராஜ்குமார் குடும்பத்திற்கு 44 லட்சம் நிதி..
பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் அதேப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ராதாகிருஷ்ணன் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரம்பலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ராதாகிருஷ்ணனை மீட்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்..

விழுந்த ராதாகிருஷ்ணனை கயிறு மூலம் கட்டி தூக்க முடிவு செய்யப்பட்டு 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கினர். இந்த சம்பவத்தின்போது மூச்சு திணறி தீயணைப்பு வீரர் ராஜ்குமார்(32) மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். பணியின் போது இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சார்பில் நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் ராஜ்குமாரின் மனைவியிடம் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்