
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகிலுள்ள வேலப்ப நாடானூரை சேர்ந்தவர் கருப்பையாநாடார் இவரது மகன் 42 வயாதான அய்யாக்கண்னு. இவருக்கு ஏற்கனவே முத்துக்குட்டி என்ற பெண்ணுடன் திருமணமாகி அவரை அய்யாகன்னு குடும்ப தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து தண்டனை அனுபவித்து விடுதலை ஆனார்.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதான சத்யா என்ற பெண்னுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் சத்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் சேர்ந்தமரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சத்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவலறிந்த சத்தியாவின் சகோதர்களாகிய பாண்டித்துரை, முத்துக்குமார் ஆகியோர் தனது தங்கையை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறி மாமனார் கருப்பையா நாடார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட சத்யா சகோதரர்கள் பாண்டித்துரை, முத்துக்குமார் ஆகியோர் கைது செய்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சத்யாவின் கணவன் அய்யாக்கன்னு தலைமறைவு ஆனதால் சத்யா மரணத்தில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் இருந்து காணாமல் போன அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை உருவாக்கி உள்ளது.