Home தமிழ்நாடு புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து செல்போன்களை திருடி ஓஎல்எக்ஸ்-ல் விற்று வந்த 3 பேர் கைது அவர்களிடமிருந்து 5 ஐந்து செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்

புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து செல்போன்களை திருடி ஓஎல்எக்ஸ்-ல் விற்று வந்த 3 பேர் கைது அவர்களிடமிருந்து 5 ஐந்து செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்

0
புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து செல்போன்களை திருடி ஓஎல்எக்ஸ்-ல் விற்று வந்த 3 பேர் கைது அவர்களிடமிருந்து 5 ஐந்து செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்

சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42) இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சங்கர் நகர் காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சரவணனின் செல்போனை பறித்துக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு கைகளில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணன் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சங்க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மேலும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து சங்கர் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து இரண்டு நபர்களிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(22) என தெரியவந்தது.

இதையடுத்து சங்கர் நகர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மணிகண்டனுக்கு உதவிய அவரின் நன்பர்களான நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த வினோத்(19) மற்றும் ஸ்டீபன்(22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தனியாக இருக்கும் நபர்களிடம் இருந்து செல்போன்களை திருடிச் சென்று அதனை ஓ,எல்,எக்ஸ் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இவர்கள் செல்போன் திருடுவதற்காக முதலில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு அந்த இரு வாகனத்தின் மூலம் செல்போன் திருடுவதில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மற்றும் மாதம் ஒரு இரு சக்கர வாகனத்தை திருடி அதன் மூலம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு பின் ஒரு மாதம் முடிவடைந்ததும் அந்த இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதுமாக இருந்ததும் தெரியவந்தது.

இதில் மணிகண்டன் என்பவர் 3 வருடங்களுக்கு முன்பு செல்போன் திருட்டு வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சங்கர்நகர் சுற்றுவட்டார பகுதியில் வேறு யாராவது செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்களா என தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here