
04.08.2020 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பி.குளவாய்பட்டி பகுதியில் அனுமதியின்றி சட்டத்துக்கு விரோதமாக மணல் கடத்தப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.வேலுச்சாமி அவர்கள் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை கைப்பற்றி, டிராக்டரை ஒட்டி வந்த டிரைவர் ஒருவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.