
வாணியம்பாடி ஆக 9 : திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் தனியார் காலணி (மெர்குறி ஷு கம்பனி) தொழிற்சாலைஇயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளநிலையில் அரசின் உத்தரவு மீறி பணியாட்களை கொண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததால் வருவாய்கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் உத்தரவி பேரில் ஆலங்காயம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் பிரசாத் தலைமையிலான வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
