Home தமிழ்நாடு ஸ்ரீ பெரும்புதூர் அருகே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஸ்ரீ பெரும்புதூர் அருகே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

0
ஸ்ரீ பெரும்புதூர் அருகே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேலூர் குப்பத்தில் வடிவேல் வயது 38 என்பவர் வசித்து வருகிறார் இவர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் இவருக்கு தேவி(34) என்ற மனைவியும் மகாலட்சுமி(16) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வடிவேல் இருங்காட்டுக் கோட்டையில் டீக்கடை நடத்தி வருகிறார். வடிவேல் நடத்திவரும் டீ கடை அருகில் எடை மேடை ஒன்று உள்ளது.

இதில் ராணிப்பேட்டையை பாலாஜி (26) என்ற வாலிபர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வடிவேலுவின் டீக்கடைக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

சூழ்நிலையில் வடிவேலின் மகள் விஜயலட்சுமிக்கும் பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலாஜி விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியுள்ளார்.

இதனை அறிந்த விஜயலட்சுமி பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜியை கைது செய்து விசாரித்து போக்சோ சட்டத்தின் சிறையில் அடைத்தனர். ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here