
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,
தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி
பண்டிகை 22.08.2020 அன்று கொண்டாடும்போது, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும்,மாநிலத்தில் கொரோனா தொற்று நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,
கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலை அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துக்சென்று நீர் நிலைகளில் கரைப்பதையும்,
பொதுமக்கள் நலன் கருதி அனுமதி இல்லையென உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலே விநாயகர் சதுர்த்தி கொண்டாட அறுவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து தரப்பினரும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே அலுவலர்கள், காவல் துறையினர் அரசின் உத்தரவினை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும்.
மேலும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில்
வழிபாடு செய்யும்போது அறுவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையினை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடி அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் அம்ரித், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.