
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பாண்டிதுரை (30).கூலி தொழிலாளியான இவரை நேற்று இரவு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஒரு கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினர்.படுகாயபடைந்த அவரை சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடிந்து,மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த 2017ல் இவரது தம்பி செல்லத்துரையை கொலை செய்தது.இந்நிலையில் இந்த கொலையும் நடைபெற்றுள்ளது.இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்