Home COVID-19 நாமக்கல் மாவட்டத்தில் அரசு தனிமைப் படுத்துதல் முகாம்கள் உள்ள 11 இடங்களில் சுமார்; 231 பேருக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு தனிமைப் படுத்துதல் முகாம்கள் உள்ள 11 இடங்களில் சுமார்; 231 பேருக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

0
நாமக்கல் மாவட்டத்தில் அரசு தனிமைப் படுத்துதல் முகாம்கள் உள்ள 11 இடங்களில் சுமார்; 231 பேருக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்ளும் அரசு தனிமைப் படுத்துதல் முகாம்கள் உள்ள 11 இடங்களில் இன்று 30.08.2020-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுமார்; 231 பேருக்கு கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், கையுறை அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற அறிவுரைகள் நாமக்கல் மாவட்ட காவல் துறையினரால் வழங்கப்பட்டது. அரசு தனிமைப் படுத்துதல் முகாம்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் விதிமுறைகளை கடைபிடித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியும், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here