

மதுரை மாவட்டம்
திருமங்கலம் அருகே கப்பலூர் பெங்களூர் கன்னியாகுமாரி நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து என்ற சரக்கு வேன் மீது கோயம்புத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
கோயம்புத்தூர் காந்திபுரம் சிவானந்தா காலனியை சேர்ந்த எட்டு பேர் சரக்கு வேனில் கோவையிலிருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் இயந்திரம் பழுது நிற்கும் வேலைக்காக ஓட்டுனர் உட்பட எட்டு பேர் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர் வேனை கோபி என்பவர் ஓட்டி வந்தார் வேன் இன்று அதிகாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது சாலையில் ஏற்கனவே மதுரையிலிருந்து சென்ற சரக்கு வேன் டயர் வெடித்து பழுதாகி நின்று கொண்டிருந்தது இதனை கவனிக்காத ஓட்டுனர் கோபி முன்னால் நின்ற சரக்கு வேன் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் வேனில் பயணம் செய்த ஏழு பேர் பலத்த காயமடைந்த இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் திருமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வேன் ஓட்டுநர் கோபியை ஒரு மணி நேரம் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர. மேலும் விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழுதடைந்த வேன் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

