
இன்று 02.09. 2020 ம் தேதி கணேஷ் நகர் காவல் நிலைய குற்ற எண்: 756/2020 Uls 153 (A), 505 ( 1 ) (b) IPC r/w Sec 2 of The Prevention of Insults to National Honour Amendment Act 2003 & Sec 67 Information Technology Act வழக்கில் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பிறரைத் தூண்டும் வகையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் குறித்து தவறான பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை தனது Face Book வலைதளத்தில் வெளியிட்டு பரப்பிய புதுக்கோட்டை காமராஜபுரம் 5ம் வீதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் மகன் மணிகண்டன் வயது 48 (நிலாச்சோறு ஹோட்டல் உரிமையாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தமிழர் கழகம்) என்பவரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் கனேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனர்.