Home தமிழ்நாடு புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தவற விட்டு சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை அங்கு பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு காண்போரை வியப்படையச் செய்தது

புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தவற விட்டு சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை அங்கு பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு காண்போரை வியப்படையச் செய்தது

0
புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தவற விட்டு சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை அங்கு பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு காண்போரை வியப்படையச் செய்தது

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரே சிறைத்துறை நிர்வாகத்தால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் ஆயுள் தண்டனை கைதிகள் மட்டுமே பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்படும் இந்த பெட்ரோல் பங்கில் நாள்தோறும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அடப்பன்வயலை சேர்ந்த சரவணன் என்ற வாடிக்கையாளர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற போது தன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகை அங்கு தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அறியாத அவர் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் பெட்ரோல் பங்கின் கீழே கிடந்த ரூ 65 ஆயிரம் மதிப்புள்ள அந்த தங்க செயினை அப்போது பணியில் இருந்த ஆயுள் தண்டனை கைதியான கிறிஸ்து ஆரோக்கியராஜ் என்பவர் எடுத்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக கொடுத்துள்ளார்.
அவரின் இந்த செயலை அறிந்த சிறைத்துறை நிர்வாகம் அவரின் நேர்மையை பாராட்டியதோடு தங்கச் செயினை விட்டுச்சென்ற நபர் குறித்து தகவல்களை சேகரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தங்கச் செயினை தவறவிட்ட சரவணன் அங்கு வந்து தனது செயின் காணாமல் போனது குறித்து பெட்ரோல் பங்க் நடத்திவரும் சிறை துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதன்பின் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்தத் தங்கச் செயின் சரவணனூடையதுதான் என்பதை உறுதி செய்த சிறைத்துறை நிர்வாகம் இன்று அவரிடம் அந்த செயினை ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி கலந்துகொண்டு தங்கச் செயினை தவறவிட்ட சரவணனிடம் அதனை மீண்டும் ஒப்படைத்ததோடு நேர்மையோடு கீழே கிடந்த செயினை கொண்டு வந்து கொடுத்த ஆயுள் தண்டனை கைதியான கிறிஸ்து ஆரோக்கியராஜையும் அவர் பாராட்டினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி கூறுகையில்:
புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் உள்ள ‌180 கைதிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என்றும்
புதுக்கோட்டையில் தண்டனை கைதிகளை கொண்டு சிறைத்துதுறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் சரவணன் என்பவர் நேற்று தவறுதலாக விட்டுச் சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை அந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றியவரும் ஆயுள் தண்டனை கைதி கிறிஸ்து ஆரோக்கியராஜ் என்பவர் பத்திரமாக எடுத்து சிறைத்துறை நிர்வாகத்திடம் ஒப்படைத்த நிகழ்வு மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் இன்று அந்த நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பாக ஒரு முறை வாடிக்கையாளர் தவற விட்டு சென்ற 1.75 லட்சம் ரூபாய் பணத்தை இதேபோன்று பெட்ரோல் பங்கில் பணியாற்றிவரும் தண்டனை கைதிகள் பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வும் பாராட்டுதலுக்கு உரியது என்றும்
தற்போது சிறைத் துறை சார்பில் மேலும் இதுபோன்று தண்டனை கைதிகளை கொண்டு இயங்கும் பெட்ரோல் பங்குகளை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் ருக்மணி பிரியதர்ஷினி கூறினார்.

புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்டு சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை சிறை துறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவரும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here