Home தமிழ்நாடு அன்னவாசல் அருகே இறுதி ஊர்வலத்தில் மோதல்: தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சாவு – கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

அன்னவாசல் அருகே இறுதி ஊர்வலத்தில் மோதல்: தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சாவு – கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

0
அன்னவாசல் அருகே இறுதி ஊர்வலத்தில் மோதல்: தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சாவு – கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

அன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பின்னங்குடியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி பொன்னம்மாள். இவர் கடந்த 8-ந்தேதி இறந்து விட்டார். இதையடுத்து பொன்னம்மாளின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (வயது 23) தரப்பினருக்கும், தர்மராஜ் (35) தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் பெரியசாமி, தர்மராஜ் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக 2 தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசாமி, பாஸ்கர், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பெரியசாமியின் உறவினர்கள் கொலைக்கு காரணமான மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் பெரியசாமியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அன்னவாசலில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here