
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காவல்துறையினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது தமிழகத்தின் கொரோனா 2-ம் அலை கொடூரமாக பரவி வரும் இச்சூழலில்
ஒட்டன்சத்திரம்
பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை,ஆகிய பகுதிகளில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இ-பாஸ் அனுமதி பயணச்சீட்டு இல்லாமல் செல்லக்கூடிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகின்றனர்
மேலும் இச்சூழலை காவல்துறையினரால் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி.முத்துசாமி கூறியதாவது காய்கறிகள் அனைத்து மக்களுக்கும் சென்று அடைவதற்கான வழி வகை ஏற்பாடு செய்யச் சொல்லி காவல்துறையினரிடம் வலியுறுத்தி சென்றார் மேலும் பழனி பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டு சென்றார்.