

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு காரணங்கள், வேண்டுகோள்கள் மற்றும் நிர்வாக ரீதியாக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கோட்டைப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கும், வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் காரையூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கும், கோட்டைப்பட்டினம் நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கும், இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 எஸ்.ஐ.க்கள் இடமாற்ற பட்டியலில் உள்ளனர்.
இதற்கான உத்தரவினை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அறிவித்துள்ளார்.