
புதுவை சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் வெளியிட்ட அறிவிப்பு, புதுவையில் அனைத்து காவல்நிலையங்கள் ரூ.2 கோடியில் சிசிடிவி நிறுவி அதன் மூலம் ஒருங்கிணைத்து கண்காணிக்கபடும்.
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை வரை, தனியாக பேருந்து மூலம் வரும் பெண்கள், அவசர உதவிக்கு 112 எண்ணை தொடர்பு கொண்டால், போலீஸ் வாகனம் மூலம், அவர்களை வீட்டிற்கே அழைத்து செல்லப்படும் திட்டம் இந்தாண்டு முதல் உருவாக்கப்படும்.
புதுச்சேரியில், போலீஸ் ஸ்பாட் ஃபைன் போடும் திட்டத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் கடந்த ஆண்டு கட்டணத்தை வசூலிக்கவும், நீதிமன்ற உத்தரவுப்படி அதில் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.