Home தமிழ்நாடு அறந்தாங்கி அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் ஏரியில் கிடந்த ஆண் பிணம்

அறந்தாங்கி அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் ஏரியில் கிடந்த ஆண் பிணம்

0
அறந்தாங்கி அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் ஏரியில் கிடந்த ஆண் பிணம்

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே வைரிவயல் ஏரியில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் அறந்தாங்கி எல்.என்.புரத்தை சேர்ந்த தீபராஜ் (வயது 40) என்பதும், அவரது தலையில் வெட்டுக்காயம் இருந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் மீது அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. தீபராஜை யாரும் கொலை செய்து ஏரியில் வீசினரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here