
ATM-ல் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்ணியமிக்க காவலர்கள்.
சிவகங்கை நகர் தெப்பக்குளம் அருகே உள்ள SBI வங்கி ATM-ல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முத்து, தபெ.லட்சுமணன், அண்ணாமலை நகர் என்பவர் ரூ.10000 பணம் எடுத்தபோது பணம் வரவில்லை என்று சென்று விடுகிறார். பின்னர் சிவகுமார் என்பவர் அதே ATM -ல் பணம் எடுக்கச் சென்றபோது ஏற்கனவே ரூ.10000 பணம் இருப்பதைக் கண்டு, அப்பணத்தை சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சிவகங்கை நகர் காவல் நிலைய மு.நி.கா.559 திரு.கார்த்திகேயன் மற்றும் மு.நி.கா.2182 திரு.சுரேஷ்பாபு ஆகிய காவலர்கள் வங்கியில் விசாரணை செய்து பணத்தின் உரிமையாளர்
முத்து என்பவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். மேற்படி காவலர்களின் கண்ணியமிக்க செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.