மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட கூவலப்புரம் கிராம நிர்வாக அதிகாரி சக்திவேல் என்பவருக்கும் அவரது உறவினரான ஜெயசந்திரனுக்கும் இடையே இடத் தகராறு காரணமாக இன்று சமரச பேச்சுவார்த்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தையின் போது விஏஓ சக்திவேல் கோட்டாச்சியர் அலுவலகத்திற்குள் உறவினர்களால் தாக்கப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார்
காயமடைந்த சக்திவேலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு., இந்த தாக்குதல் தொடர்பாக ராஜேஸ்வரி, ஜெயச்சந்திரன், ராமர், தங்கமலை என்ற 4 பேரை கைது செய்தும், மேலும் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை