
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் அன்பழகன் என்பவர் கடந்த 24 ஆம் தேதி ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணல் கொள்ளையர்களுடன் மது அருந்திய போது அவரது வாக்கி டாக்கியை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவலர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்திபன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.