
ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன.
பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி ஆர்பாட்டக்காரர்களை கைது செய்தனர்;
அவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.